கரிகாலன் இமயத்தில் எழுதி முடித்தது கூறியது      

208. இப்பு றத்திமய மால்வரையின் மார்பி னகலத்து
   எழுதி னானெழுது தற்கரிய வேத மெழுதி
ஒப்பு றத்தனது தொன்மரபு மம்ம ரபின்மேல்
  உரைசெய் பல்புகழுமொன் றுமொழி யாதபரிசே.

     (பொ-நி.) மரபும், புகழும், ஒன்றும்  ஒழியாத பரிசுவரையின் மார்பின்
அகலத்து, வேதம் எழுதி ஒப்புற, எழுதினான்; (எ-று.)

     (வி-ம்.) இப்புறம்-தென்புறம். மார்பு-நடுஇடம். அகலம் - பரந்த இடம்,
எழுதி ஒப்புற-எழுதினால் ஒப்ப, பரிசு-தன்மை.                      (31)