உறுப்புநலங் கூறி விளித்தது 21. | சூதளவு அளவெனும் இளமுலைத் | | துடியளவு அளவெனும் நுண்ணிடைக் காதளவு அளவெனும் மதர்விழிக் கடலமு தனையவர் திறமினோ. | (பொ-நி) இளமுலை, நுண்ணிடை, மதர்விழி (உடைய) அமுதனையவர் திறமின்; (எ-று.) (வி-ம்.) சூது-சூதாடு கருவி. துடி- உடுக்கை. இடை-இடுப்பு.காதை அளாவும் அளவு எனும் மதர்விழி என்க. கடல் அமுது-திருப்பாற்கடலில் தோன்றிய அமிழ்தம். இதனை 'அலையிடைப் பிறவா அமிழ்து' என இளங்கோவடிகள் பாராட்டுதல் அறிக. மதர்-செருக்கு. விழி-கண்.முலை, இடை, விழிச் சிறப்புக்கூறியவாறு. விழி காதுவரை நீண்டிருப்பது நல்லிலக்கணம். "காதளவோடிய கலகபாதகக் கண்" என்றார் பட்டினத்தடிகளும். |