காளி குலோத்துங்கனை நினைந்து மகிழ்தல் கூறியது 210. | வையகமாங் குலமடந்தை மன்னபயன் | | தன்னுடைய மரபு கேட்டே ஐயனையான் பெற்றெடுத்த அப்பொழுதும் இப்பொழுதொத் திருந்த தில்லை. | (பொ-நி.) அபயன் மரபுகேட்டு, இப்பொழுது ஒத்து பெற்றெடுத்த அப்பொழுதும் இருந்ததில்லை; (எ-று.) (வி-ம்.) வையகம்- உலகம். குலம்-மேன்மை. மன்-தலைவன். அபயன்- குலோத்துங்கன். மரபு- குலமுறை. ஐயன்: குலோத்துங்கன், அப்பொழுதும் - அவனைப் பெற்றெடுத்த அக்காலத்தும். இப்பொழுதும்-இப்பொழுது அடையும் மகிழ்ச்சி. காளி குலோத்துங்கன் புகழைக் கேட்டதும் தன் மகனாகக் கொண்டு பெற்றகாலத்துப் பெற்ற மகிழ்ச்சியினும் இப்போது பன்மடங்குமகிழ்கூர்ந்ததாகக் கூறினாள்; ‘ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்' என வள்ளுவனாரும், ‘ஈன்ற ஞான்றினும் பெரிதுவந் தனளே' என, ஒக்கூர் மாசத்தியாரும் கூறும் கருத்துரைகள், தாய்மையன்பின் நிலைக்கு இதனோடு ஒத்த கருத்தாதலை அறிந்தின்புறுக. (33) |