பேய்கள் காளியிடம் தம் மிகுபசி மொழிந்தது கூறியது

212.ஆறுடைய திருமுடியா னருளுடைய
   பெருந்தேவி அபயன் காக்கும்
பேறுடைய பூதமாப் பிறவாமல்
  பேய்களாப் பிறந்து கெட்டேம்.

     (பொ-நி.) "தேவி ! அபயன் காக்கும் பூதமாப் பிறவாமல் பேய்களகப்
பிறந்து கெட்டோம்," (எ-று.)

     (வி-ம்.) ஆறு-கங்கை. முடியான்-சிவன். அருள் உடைய - திருவருள்
கொண்ட. பூதங்களுக்குப் பலியிடல் அரசர் வழக்கம்.                 (1)