இதுவும் அது 218. | அகளங்கன் நமக்கிரங்கான் அரசரிடுந் | | திறைக்கருள்வான் அவன்றன் யானை நிகளம்பூண் டனவடியேம் நெடும்பசியான் அறவுலர்ந்து நெற்றாய் அற்றேம். | (பொ-நி.) அகளங்கன் இரங்கான்; திறைக்கு அருள்வான் அவன் யானை நிகளம்பூண்டன. அடியேம் உலர்ந்து நெற்றாய் அற்றேம்; (எ-று.) (வி-ம்.) அகளங்கன் - குலோத்துங்கன். திறை -கப்பம். நிகளம்-யானை கட்டும் சங்கிலி. அற உலர்ந்து -மிகவும் வாடி.நெற்று ஆய்- முதிர்ந்து உலர்ந்த வற்றல் போலாகி; அற்றேம்-அழிந்தேம். (7) |