காளி மொழிந்தது      

227.நிருபரணி வென்ற அகளங்கன்மத
   யானைநிக ளங்களொடு நிற்பன வதற்கு
ஒருபரணி யுண்டெனவு ரைத்தன
  உரைப்படி உமக்கிது கிடைக்கு மெனவே.

     (பொ.நி.) அகளங்கன்  மதயானை  நிற்பன (ஆகிய)  அதற்கு; பரணி
உண்டென உரைத்தன. இஃது உமக்குக் கிடைக்கும் என; (எ-று.)

     
(வி-ம்.) அணி-வரிசை; (பலர் என்றபடி)அகளங்கன்- குலோத்துங்கன்.
நிகளம்-யானை கட்டும் காற்சங்கிலி. நிற்பன  ஆகிய அதற்கு என்க. பரணி -
பரணிப்போர்.                                                (14)