கண்ணன் குலோத்துங்கனாகப் பிறந்தது

234இருள்முழுது மகற்றும்விது குலத்தோன் தேவி
   இகல்விளங்கு தபனகுலத் திராச ராசன்
அருள் திருவின் திருவயிற்றில் வந்து தோன்றி
  ஆலிலையி னவதரித்தா னவனே மீள.

     (பொ-நி.)  அவனே,   மீள,  விதுகுலத்தோன்  தேவி,  இராசராசன் அருள்திருவின் வயிற்றில் வந்து தோன்றி; (எ-று.)

     (வி-ம்.) விது - திங்கள்.  விதுகுலம்- சளுக்கர்குலம். விதுகுலத்தோன்; இராசராசேந்திரன்.  விதுகுலத்தோன்   தேவி: அம்மங்கை,  இகல் - வெற்றி.
தபனன்-ஞாயிறு. தபனகுலம், சோழர்குலம்.  இராசராசன்  இராசேந்திரனாகிய கங்கைகொண்ட சோழன். இராசராசன் அருள்திரு -அம்மங்கை. ஆலிலையில் அவதரித்தான்; கண்ணன், மீள-மீண்டும்.                           (3)