இருகுலத்தோரும் மகிழ்ந்தது      

238திங்களினி ளங்குழவி செம்மலிவ னென்றுஞ்
   செய்யபரி திக்குழவி ஐயனிவ னென்றுந்
தங்களின்ம கிழ்ந்திருகு லத்தரசர் தாமுந்
  தனித்தனி உவப்பதொர் தவப்பயனு மொத்தே.

     (பொ-நி.)  இருகுலத்தரசரும்  திங்களின்   இளங்குழவி    என்றும்,
பரிதிக்குழவி  என்றும்   மகிழ்ந்து உவப்பதோர் தவப் பயன்  ஒத்து; (எ-று.)

     (வி-ம்.) இருகுலம்; தாய்தந்தையர் குலம்.தங்களின் மகிழ்ந்து -தமக்குள்
களிப்புற்று. தவப்பயனுக் கேற்பவே புதல்வர் பிறத்தலால்,அத் தவப்பயனையே
உவமை கூறினார்.                                              (7)