ஐம்படைத்தாலி அணிந்தமை 239 | பண்டுவசு தேவன்மக னாகிநில மாதின் | | படர்களையும் மாயனிவ னென்றுதெளி வெய்தத் தண்டுதனு வாள்பணிலம் நேமியெனு நாமத் தன்படைக ளானதிரு ஐம்படைத ரித்தே. |
(பொ-நி.) மாயன் இவன் என்று தெளிவெய்த, ஐம்படைதரித்து; (எ-று.) (வி-ம்.) நிலமாது - மண்மகள். படர் - துன்பம். மாயன் - (திருமால்) கண்ணன். தண்டு - தடி. தனு - வில். வாள் - வாட்படை. பணிலம் - சங்கு. நேமி - சக்கரம். தன் - திருமாலின். ஐம்படை - ஐம்படைத்தாலி. (8) |