கனவுநிலை கூறி விளித்தது

24.கூடிய இன்கன வதனிலே
     கொடைநர துங்கனொடு அணைவுறாது
ஊடிய நெஞ்சினொடு ஊடுவீர்
   உமது நெடுங்கடை திறமினோ.

     (பொ-நி.) கனவதனிலே,   அணைவுறாது,   ஊடிய  நெஞ்சினொடு
ஊடுவீர் திறமின்; (எ-று)

     (வி-ம்.) கூடிய   -  வந்தடைந்த.   நரதுங்கன்  - குலோத்துங்கன்.
அணைவுறாது - தழுவிப்புணராது.  ஊடிய - பிணங்கிய.  நெஞ்சு - மனம்.
கனவிற் கண்ட குலோத்துங்கனைப் புணராது விட்ட நெஞ்சினை நொந்தன
ரென்க.                                                    (4)