மழலை மொழிந்தது 241. | தாயர்தரு பால்முலை சுரக்கவரு நாளே | | தானுமுல கத்தவர் தமக்கருள் சுரந்தே தூயமனு வுஞ்சுருதி யும்பொருள் விளங்கிச் சொற்கடெ ரியத்தனது சொற்கடெரி வித்தே. | (பொ-நி.) முலை சுரக்கவருநாள், அருள் சுரந்து, மனுவும் சுருதியும் விளங்கித்தெரிய, சொற்கள் தெரிவித்து. (எ-று.) (வி-ம்.) சுரக்க வருநாள் - பாலருந்தும் பருவம், சுருதி - மறை, மழலைப்பருவத்தே மொழிந்த சொற்களிலும் மனுநூல், மறைநூல் அரும்பொருள் தோன்றின என்க. (10) |