பூணூல் அணிந்தமை

242.திருமார்பின் மலர்மடந்தை திருக்கழுத்தின்
        மங்கலநா ணென்ன முந்நூற்
பெருமார்பின் வந்தொளிரப் பிறப்பிரண்டா
      வதுபிறந்து சிறந்த பின்னர்.

     (பொ-நி.)  மார்பின்   மங்கல   நாண்   என்ன,  முந்நூல்  ஒளிர,
இரண்டாவது பிறப்பும் பிறந்து சிறந்த பின்னர்; (எ-று.)

     (வி-ம்.) திரு - அழகு.  மலர் மடந்தை - திருமகள். மங்கல  நாண்
- தாலிக்கயிறு.  முந்நூல் - பூணூல்.  பூணூல் அணிந்த  பின் இரண்டாவது
பிறப்பாம் என்க.                                             (11)