இளவரசானமை

249.இசையுடனெ டுத்தகொடி அபயனவ
      னிக்கிவனை இளவரசில் வைத்த பிறகே
திசையரச ருக்குரிய திருவினை
     முகப்பதொரு திருவுளம டுத்தருளியே.

     (பொ-நி.)   அபயன்   இளவரசில்   வைத்த   பிறகு,  திருவினை
முகப்பதொரு திரு உளம் அடுத்தருளி; (எ-று.)

     (வி-ம்.)  இசை   -  புகழ்.   அபயன்:    இராசேந்திர   சோழன் 
மகனான  வீரராசேந்திரன். அவனி-உலகு. இள அரசு -இளவரசுப் பட்டம்.
திரு-செல்வம். முகத்தல் -  கொள்ளை கொள்ளுதல்.  திரு உளம் - உயர்
எண்ணம். அடுத்து அருளி - உண்டாகி.                         (18)