வடவரசரை வெற்றிகொண்டது 251. | குடதிசை புகக்கடவு குரகதர | | தந்திரவி குறுகலும் எறிக்கு மிருள்போல் வடதிசை முகத்தரசர் வருகதமு கத்தனது குரகதம் உகைத்த ருளியே. |
(பொ-நி.) இரவி குறுகலும் எறிக்கும் இருள் போல், அரசர் வருகதம் உக. தனது குரகதம் உகைத்தருளி; (எ-று.) (வி-ம்.) குடதிசை - மேல்திசை. கடவுதல் -செலுத்தல். குரகதம்- குதிரை.ரதம்-தேர், இரவி-ஞாயிறு குறுகலும்-கீழ்த்திசையை அணைதலும். எறிக்கும் - அழிக்கப்படும். வடதிசைமுகம் - வடக்குத் திக்கினிடம். கதம்- வெகுளி. மேல்திசை நோக்கிய ஞாயிறுகண்டழியும் இருள்போல், வடதிசை நோக்கிய குலோத்துங்கனைக் கண்டழிந்தனர் வடவர் என்க. (20) |