இதுவும் அது 256. | பொருத ராதிபர் கண்கள் சிவந்தில | | போரி லோடிய கால்கள் சிவந்தன விருத ராச பயங்கரன் செங்கையில் வேல்சி வந்தது கீர்த்தி வெளுத்ததே. |
(பொ-நி.) பொருதராதிபர் கண்கள் சிவந்தில; கால்கள் சிவந்தன; செங்கையில் வேல்சிவந்தது; கீர்த்தி வெளுத்தது; (எ-று.) (வி-ம்.) தராதிபர் - அரசர். போரில் - போர்க்களத்தில். விருதராசபயங்கரன்; குலோத்துங்கன், வேல்சிவந்தது - பகைவரைக் கொன்றமையால் வேல் குருதிபடிந்து செந்நிற மேற்றது. கீர்த்தி வெளுத்தது என்றது, அதனால் அவன் பரந்த புகழ் களங்கமற்றதாதலால் அதனை வெண்மை நிறமாகக் கூறுதல் சான்றோர் மரபு. ஆதலால், ‘வெளுத்தது ' என்றார். (25) |