சோழநாடு அரசிழந்த இயல்

258.மறையவர் வேள்வி குன்றி
      மனுநெறி யனைத்தும் மாறித்
துறைகளோ ராறும் மாறிச்
     சுருதியும் முழக்கம் ஓய்ந்தே.

     (பொ-நி.)  வேள்வி  குன்றி,  மனுநெறி  மாறி,  துறைகள்  ஆறும்
மாறி, சுருதியும் ஓய்ந்து. (எ-று.)

     (வி-ம்.)   துறைகள்   ஆறு  -  சிட்சை,   கற்பம்,   வியாகரணம்,
நிருத்தம், சந்தோபிசிதம், சோதிடம், சுருதி-மறை.                 (27)