இதுவும் அது

259.சாதிக ளொன்றோ டொன்று
      தலைதடு மாறி யாரும்
ஓதிய நெறியி னில்லாது
     ஒழுக்கமும் மறந்து போயே.

     (பொ-நி.)  சாதிகள்  தலைதடுமாறி,  யாரும்  நெறியில்  நில்லாது
ஒழுக்கமும் மறந்துபோய், (எ-று.)

     (வி-ம்.)  தலைதடுமாறுதல்,  கண்டவாறு  கலத்தல்,  ஓதிய  நெறி-
நூல்களில் கூறப்பட்ட ஒழுக்கவகைகள்.                        (28)