கனவுநிலை கூறி வி்ளித்தது

26. எனத டங்கஇனி வளவ துங்கனருள்
     எனம கிழ்ந்துஇரவு கனவிடைத்
தனத டங்கள்மிசை நகந டந்தகுறி
   தடவு வீர்கடைகள் திறமினோ.

     (பொ-நி) கனவிடை "வளவதுங்கன் அருள் அடங்க இனிஎனது" என
மகிழ்ந்து நகம் நடந்த குறி தடவுவீர் திறமின். (எ-று)

     (வி-ம்.) அடங்க-முழுதும். வளவதுங்கன்-குலோத்துங்கன்,  தனதடம் -
கொங்கைத்தடம்.  நகம் நடந்த-நகத்தால் உண்டான. குறி-கீற்றுக் குறிகளை.
தடவுதல்-கையால் தொட்டுத் தொட்டுப் பார்த்தல். தடவுதல் நனவில் என்க.
கனவிடைக் கண்ட நகக்குறியை நனவிடை ஆராய்ந்தன ரென்க.  இவ்வாறு
தடவியதற்குக்  காரணம்  கனவுக்கும்  நனவுக்கும்  வேற்றுமை  யறியாமை
என்க.                                                      (6)