இதுவும் அது

260.ஒருவரை யொருவர் கைம்மிக்கு
      உம்பர்தங் கோயில் சோம்பி
அரிவையர் கற்பின் மாறி
     அரண்களு மழிய ஆங்கே,
     
     (பொ-நி.)
   ஒருவரை  ஒருவர்  கைம்மிக்குக்  கோயில்  சோம்பி,
அரிவையர் கற்பின் மாறி, அரண்கள் அழிய ; (எ-று.)

    
 (வி-ம்.)  கைம்மிகுதல்  -  கீழ்ப்படுத்து   மேம்படல்.  உம்பர் -
கடவுளர்   சோம்புதல்:  பூசையின்றி   அவிந்துகிடத்தல்;   அரிவையர் -
பெண்கள்.  அரண்: அவ்வவர் நிற்றற்குரிய ஒழுக்கவரம்பு.
                                                        (29)