கொற்றக்குடை கவித்தமை

267.குவிகைகொ டரசர் சுற்றிய
      குரைகழல் அபயன் முத்தணி
கவிகையின் நிலவெ றித்தது
     கலியெனு மிருளொ ளித்ததே.

     (பொ-நி.)  அபயன்   கவிகையின்  நிலவு   எறித்தது,  கலிஎனும்
இருள் ஒளித்தது; (எ-று.)

    
 (வி-ம்.)  குவிகை  -  வணங்கிய  கை.   குரைத்தல்  - ஒலித்தல். 
கவிகை - வெண்கொற்றக்குடை.  நிலவு  எறித்தது  - ஒளி வீசியது.  கலி-
துன்பம். இருள் ஒளித்தது-இருட்டு நீங்கிற்று.
                                                       (36)