ஊடல் உவகை நிலை கூறி விளித்தது

27. முனிபவர் ஒத்திலராய் முறுவல்கி ளைத்தலுமே
     முகிழ்நகை பெற்றமெனா மகிழ்நர்ம ணித்துவர்வாய்
கனிபவ ளத்தருகே வருதலும் முத்துதிரும்
   கயல்களி ரண்டுடையீர் கடைதிற மின்திறமின்.

     (பொ-நி)  முறுவல்   கிளைத்தலும்,  மகிழ்நர்வாய்   பவளத்தருகே
வருதலும், முத்து உதிரும் கயல்கள் உடையீர் திறமின் (எ-று.)

     (வி-ம்.) முனிபவரொத்து - ஊடல்கொண்டு.  இலராய்  பின்  ஊடல் நீங்கியவராய்.  முறுவல்- புன்சிரிப்பு. கிளைத்தல்-தோன்றுதல்; உண்டாதல்.
முகிழ்நகை - புன்சிரிப்பு.  மகிழ்நர் - கணவர். மணி - அழகு.  துவர்வாய்-
பவளம்போன்ற  வாய்.  கனி - முதிர்ந்த;  முற்றிய.பவளம்-பவளம்போன்ற
வாய். வருதல் முத்தமிடற்  கென்க.  முத்து - முத்துப் போன்ற   கண்ணீர்.
(மகிழ்ச்சிக் கண்ணீர் என்க)  கயல்-மீன்போன்ற கண். ஊடல் நீங்கக் கண்டு
தலைவன் முத்தமிடற்கு வர, அது கண்டு  மகிழ்ச்சிக்  கண்ணீர் உகுத்தா
ள் என்க.                                                     (7)