இதுவும் அது

272.பரிசில் சுமந்தன கவிகள்
      பகடுசு மந்தன திறைகள்
அரசு சுமந்தன இறைகள்
     அவனி சுமந்தன புயமும்.

     (பொ-நி.)  கவிகள்  பரிசில் சுமந்தன;  திறைகள்  பகடு  சுமந்தன;
அரசு இறைகள் சுமந்தன; புயம் அவனி சுமந்தன; (எ-று.)

     (வி-ம்.) பரிசில் - அன்புக்கொடை.  கவி - புலவோர்;  நாற்கவிகள்.
பகடு - எருது.  திறை - பகையரசர்  இடுவது.  அரசு - சிற்றரசர்.  இறை-
குலோத்துங்கன்     கீழ்       இருந்து    அரசாள்வோர்    அளிக்கும் 
இறைப்பொருள்.  அவனி - உலகம்.   புயம்- குலோத்துங்கன் தோள்கள்.
                                                       (41)