இதுவும் அது

275.மென்க லாபமட வார்கள் சீறடி
      மிசைச்சி லம்பொலிவி ளைப்பதோர்
இன்க லாம்விளைவ தன்றி எங்குமொர்
     இகல்க லாம்விளைவ தில்லையே.

     (பொ-நி.) மடவார்கள்  சிலம்பொலி  விளைப்பதோர்   இன்கலாம்
விளைவதன்றி, இகல்கலாம் விளைவதில்லை; (எ-று.)

     (வி-ம்.) கலாபம்-மயில்.  இன்கலாம் - இனிய  மாறுபாடு; (சிலம்பின்
பரல் பலவும் ஒரே ஓசை உண்டாக்குமாறு ஒலிக்காமல் தாம்பல என்பதைக் காட்டிச் சற்று முன் பின்னாக ஒலித்தல்.) இகல்கலாம்-பகையால் எழும்
பூசல்.                                                  (44)