நால்வகைச் சேனைகளும் திரண்டமை

279.முரசறைகென் றருளுதலும் முழுதுலகும்
      ஒருநகருட் புகுந்த தொப்பத்
திரைசெய்கடல் ஒலியடங்கத் திசைநான்கின்
     படைநான்கும் திரண்ட ஆங்கே.

     (பொ-நி.)   அருளுதலும்,   படைநான்கும்,   கடல்  ஒலி அடங்க,
முழுதுலகும் நகருட் புகுந்ததொப்ப, ஆங்கே திரண்ட, (எ-று.)

     (வி-ம்.) முரசு -பேரிகை. திரை-அலை. கடல் ஒலி அடங்கச் சேனை
ஒலி  மிகுந்ததென்க.  நான்கின் - நான்கினின்றும்.  படை நான்கு -யானை
குதிரை   தேர் காலாள்  என்னும்  நால்வகைப்படை.  அறைக - அடிக்க. 
திரண்ட-ஒன்று கூடின.
                                                        (48)