இதுவும் அது

281. அனக தானமறை வாணர்பலர் நின்று பெறவே
       அபய தானம்அப யம்புகுது மன்னர் பெறவே
கனக தானம்முறை நின்றுகவி வாணர் பெறவே
     கரட தானம்மத வாரணமு மன்றுபெறவே.

     (பொ-நி.)  மறைவாணர்  அனகதானம்  பெற, மன்னர் அபயதானம்
பெற. கவிவாணர் கனகதானம் பெற, வாரணம் கரடதானம் பெற; (எ-று.)

     (வி-ம்.) அகம்-பாவம்; அனகம்-பாவமற்றது. மறைவாணர் -அந்தணர்.
அபயதானம்-அஞ்சல் அளித்தல்.  அபயம்-அடைக்கலம்.  புகுது  மன்னர்-
அடைகின்ற   வேந்தர்கள்.  தானம்-பொன்தானம். முறைநின்று-தகுதியாக.
கரடதானம் - மதம்பாயும் இடம். மதவாரணம் - மதங்கொண்ட  யானைகள்.
யானைகளிப்பு மிகுந்தன என்க.                             (50)