பிறபல ஒலி முழக்கம்

284.மன்னர் சீர்சய மிகுத்திடை விடாத வொலியும்
      மறைவ லாளர்மறை நாள்வயின் வழாதவொலியும்
இன்ன மாகடன் முழங்கிஎழு கின்ற வொலியென்று
     இம்பர் உம்பரறி யாதபரி செங்கு மிகவே.

     (பொ-நி.)   சீர்சயம்   மிகுத்து   மன்னர்  இடைவிடாத  ஒலியும்,
மறைவலாளர் மறைவழாத ஒலியும், இன்னகடல் ஒலி என்று அறியாத பரிசு,
மிக; (எ-று.)

    (வி-ம்.)  சீர்சயம்   மிகுத்து  - குலோத்துங்கனுடைய   சிறப்பையும் வெற்றியையும்  மிகுத்து.  மறைவலாளர்  -  அந்தணர்.  நாள்வயின் மறை
என   இயைக்க;  நாள்தோறும்  ஓதத்தக்க  மறை என்க.  இன்னமாகடல்-
இவ்வகையான  பெரிய  கடல்தான்.  இம்பர் - இவ்வுலகத்தார்,  உம்பர் -
விண்ணுலகத்தார். பரிசு-தன்மை.
                                                        (53)