ஏழிசை வல்லபி உடனிருந்தமை

285.வாழி சோழகுல சேகரன் வகுத்த இசையின்
    மதுர வாரியென லாகுமிசை மாத ரிதெனா
ஏழு பாருலகொ டேழிசை வளர்க்க வுரியாள்
   யானை மீதுபிரி யாதுட னிருந்து வரவே.

     (பொ-நி.) இசையின்  மதுரவாரி  எனலாகும்  இசை மாது, ஏழிசை
வளர்க்க உரியாள் அரிது எனா உடன் இருந்துவர; (எ-று.)

    
 (வி-ம்.) சோழகுலசேகரன் - குலோத்துங்கன்.  இ்சையின் மதுரவாரி-
இசை   இன்பக்கடல்.   இசைமாது:  ஏழிசை  வல்லபி  - அரிது  எனா -
பிரிந்திருத்தல் அரிதென்று.  ஏழுபார்  உலகு.  உலகின்கண்  உள்ள ஏழு
தீவுகளையும். அரிதெனா பிரியாது என இயைக்க. மூன்றாம் மனைவியாகிய
இவள் பிரியாது உடனிருந்தாள் என்க.
                                                       (54)