அரசரும் பெண்களும் சூழ்ந்து வந்தமை

287.பிடியின் மேல்வரு பிடிக்குல மநேக மெனவே
      பெய்வ ளைக்கைமட மாதர்பிடி மீதின் வரவே
முடியின் மேன்முடி நிரைத்துவரு கின்ற தெனவே
     முறைசெய் மன்னவர்கள் பொற்குடை கவித்துவரவே.

     (பொ-நி.)  மடமாதர்  பிடிமீதின்  வர,  மன்னவர்கள்  பொற்குடை கவித்துவர; (எ-று.)

     (வி-ம்.) பிடி - பெண்யானை. குலம் - கூட்டம். பெய்வளை  கை -
வளையலணிந்த  கைகளையுடைய.  மடமாதர்-அரசபரிவார மகளிர். முடி-
மகுடம். பொற்குடை-பொன்னாலாகிய குடை.
                                                       (56)