அரசரோடு வீரர் சூழ்ந்து வந்தமை 288. | யானை மீதுவரும் யானையு மநேக மெனவே | | அடுக ளிற்றின்மிசை கொண்டர சநேகம் வரவே சேனை மீதுமொரு சேனைவரு கின்ற தெனவே தெளிப டைக்கல னிலாவொளி படைத்து வரவே. |
(பொ-நி.) அரசு அநேகம் வர, படைக்கலன் நிலா ஒளி படைத்துவர; (எ-று.) (வி-ம்.) அடுகளிறு - கொல்கின்ற யானை. மிசை -மேலிடம். தெளி- மாசற்ற. படைக்கலன் - வாள் முதலிய படைக்கருவி. நிலா ஒளி-நிலவைப் போன்ற ஒளி. படைத்து-உண்டாக்கி. (57) |