பெண்கள் தேர்மீது வந்ததும் புழுதி எழுந்ததும்

290.தேரின் மீதுவரு தேர்களும நேகம் எனவே
      செம்பொன் மேகலை நிதம்பநிரை தேரின் வரவே
பாரின் மீதுமொரு பாருளது போலும் எனவே
     படல தூளியு மெழுந்திடையின் மூடி வரவே.

     (பொ-நி.)  நிதம்பநிரை  தேரின்  வர,  படல  தூளியும் இடையின்
மூடிவர; (எ-று.)

     (வி-ம்.) மேகலை-மேகலை என்னும்  அணி;  இது, மு ப்பத்திரண்டு
வடத்தினாற் செய்தது; நிதம்பம்-இடையைச் சார, முன் பக்கத்துள்ள பரந்த
இடப்பகுதி. நிரை - வரிசை. பார் - உலகம். படலம்-கூட்டம். தூளி-புழுதி.
இடை-வானிடை.                                          (59)