இதுவும் அது

298.அக்கிரிகு லங்கள்விடும் அங்குலியின்
      நுண்திவலை அச்செழியர் அஞ்சி விடுமத்
திக்கிலுள நித்திலமு கந்துகொடு
     வீசியொரு தென்றல்வரு கின்றதெனவே.

     (பொ-நி.) கிரிகுலங்கள்  விடும்  திவலை  நித்தில  முகந்துகொடு
வீசி,தென்றல் வருகின்றதென; (எ-று.)

     (வி-ம்.) கிரிகுலம்-யானைக்கூட்டம். அங்குலி - துதிக்கையின் நுனி.
திவலை - நீர்த்திவலை, செழியர் - பாண்டியர். அத்திக்கு -தெற்குத் திக்கு.
நித்திலம் - முத்து. முகந்து - மொண்டு கொடு.  இடைக்குறை  (கொண்டு)
என - என்று சொல்லும்படி ஆக.                            (67)