குலோத்துங்கன் தில்லைக் கூத்தனை வணங்கித்
திருவதிகை யடைந்தது

299.தென்றிசையி னின்றுவட திக்கின்முகம்
      வைத்தருளி முக்கணுடை வெள்ளி மலையோன்
மன்றினட மாடியருள் கொண்டு விடை
     கொண்டதிகை மாநகருள் விட்ட ருளியே.

     (பொ-நி.) வடதிக்கின் முகம் வைத்தருளி, மன்றின் நடமாடி அருள்
கொண்டு, விடைகொண்டு, அதிகை நகருள் விட்டருளி; (எ-று.)

     (வி-ம்.)முகம் வைத்தல்- முகம்நோக்கிப் புறப்படல். வெள்ளிமலை-
கைலைமலை.  மன்றில்  நடமாடி:  தில்லைக்கூத்தன்.  அதிகைமா  நகர்-
திருவதிகை என்னும் சிறந்த நகரம், விட்டருளி-சேனைகளோடு தங்கியருளி.
                                                       (68)