திருமால் வணக்கம் 3. | ஒருவயிற்றிற் பிறவாது | | பிறந்தருளி உலகொடுக்கும்் திருவயிற்றிற்று ஒருகுழவி திருநாமம் பரவுதுமே. | 4. | அந்நெடுமால் உதரம்போல் | | அருளபயன் தனிக்கவிகை இந்நெடுமா நிலமனைத்தும் பொதிந்தினிது வாழ்கவென்றே. | (பொ-நி) கவிகை பொதிந்து வாழ்க என்று, உலகு ஒடுக்கும் வயிற்றிற்று குழவி நாமம் பரவுதும்; (எ-று.) (வி-ம.்) ஒடுக்குதல்-அடைத்தல், வயிற்றிற்று-வயிற்றையுடையது. குழவி -குழந்தை. கண்ணன் - திருமால். நாமம்-பெயர். பரவுதும்- வணங்குவோம். நெடுமால் - நீண்ட திருமால். உதரம் -வயிறு. கவிகை-குடை. பொதிந்து- தன்னுள் அடக்கி. உதரம் அடக்கியதுபோல் கவிகை அடக்கி வாழ்க என்க. அபயன் உலக முழுவதும் காப்பது குறிக்கப்பட்டது. (3, 4) |