திருமால் வணக்கம்

3. ஒருவயிற்றிற் பிறவாது
     பிறந்தருளி உலகொடுக்கும் 
திருவயிற்றிற்று ஒருகுழவி
    திருநாமம் பரவுதுமே.
    
4. அந்நெடுமால் உதரம்போல்
     அருளபயன் தனிக்கவிகை
இந்நெடுமா நிலமனைத்தும்
    பொதிந்தினிது வாழ்கவென்றே.

    (பொ-நி)   கவிகை   பொதிந்து  வாழ்க  என்று,  உலகு  ஒடுக்கும்
வயிற்றிற்று குழவி நாமம் பரவுதும்; (எ-று.)

    (வி-ம.்) ஒடுக்குதல்-அடைத்தல், வயிற்றிற்று-வயிற்றையுடையது. குழவி
-குழந்தை.  கண்ணன் - திருமால்.  நாமம்-பெயர். பரவுதும்- வணங்குவோம்.
நெடுமால் - நீண்ட  திருமால்.  உதரம் -வயிறு. கவிகை-குடை. பொதிந்து-
தன்னுள் அடக்கி. உதரம் அடக்கியதுபோல் கவிகை  அடக்கி வாழ்க என்க.
அபயன்  உலக  முழுவதும்  காப்பது  குறிக்கப்பட்டது.            (3, 4)