இங்ஙனம் கூறும் காளிதிரு முன்
கலிங்கத்துப் போர்கண்ட பேய் வந்தமை
 
301.என்னுமித நன்மொழி எடுத்திறைவி
      சொல்லுவதன் முன்னம்இகல் கண்ட தொருபேய்
தன்னுடைய கால்தனது பின்பட
     மனத்துவகை தள்ளிவர ஓடிவரவே.

     (பொ-நி.)   இறைவி   மொழி   எடுத்துச்   சொல்லுவதன்முன்னம்
இகல்கண்டதொரு பேய், கால்பின்பட, உவகை தள்ளிவர, ஓடிவர; (எ-று.)

     (வி-ம்.) என்னும் - காஞ்சி  அடைந்தான்  என்னும்,  இதநன்மொழி-
இதமான  நல்மொழி.  இகல் - கலிங்கப்போர். பின் - முதுகு. மனத்துவகை-
மன மகிழ்வு: ஏழன்தொகை. தள்ளிவர-முன்னிட.                  (70)