குலோத்துங்கன்பால் கொண்ட மையல்கூறி விளித்தது 31. | தண்கொடை மானதன் மார்புதோய் | | தாதகி மாலையின் மேல்விழும் கண்கொடு போம்வழி தேடுவீர் கனகநெ டுங்கடை திறமினோ. |
(பொ-நி)மானதன் தாதகி மாலையின் மேல் விழும் கண்கொடு வழி தேடுவீர் திறமின்; (எ-று.) (வி-ம்.) கொடை - கொடுத்தல். மானதன்- குலோத்துங்கன் தாதகி - ஆத்தி. கொடு(இடைக்குறை)-கொண்டு. போம்வழி-தாம் போம் வழி. கண் மாலைமீதே பதிந்து மயக்கத்தை விளைத்துவிட்டமையின், தாம்போம் வழி எதுவென்றும் தேடவேண்டியதாயிற்றென்க. கனகம்-பொன். நெடுங்கடை- நீண்ட வாசல். (11) |