காஞ்சியின் சிறப்பு

314.பாரெ லாமுடை யான்அப யன்கொடைப்
      பங்க யக்கரம் ஒப்பெனப் பண்டொர்நாள் காரெ லாமெழுந் தேழரை நாழிகைக் காஞ்ச
     னம்பொழி காஞ்சிய தன்கணே.

     (பொ-நி.)  அபயன்கரம்  ஒப்பென,  ஒருநாள்  காரெலாம் காஞ்சனம்
பொழி காஞ்சி அதன்கண்; (எ-று.)

     (வி-ம்.) பார்  எலாம் - உலகம்   யாவும். அபயன் - குலோத்துங்கன்.
பங்கயம் - தாமரை. கார் -மேகம். காஞ்சனம்-பொன்.               (3)