குலோத்துங்கன் தங்கிய மாளிகை மண்டப இயல்பு

315.அம்பொன் மேரு வதுகொ லிதுகொலென்
      றாயி ரங்கதிர் வெய்யவன் ஐயுறும்
செம்பொன் மாளிகைத் தென்குட திக்கினில்
     செய்த சித்திர மண்டபந் தன்னிலே.

     (பொ-நி.) வெய்யவன்  ஐயுறும்  மாளிகை  மண்டப, தன்னில்; (எ-று.)

     (வி-ம்.) இது  மாளிகையைக்  குறித்தது. வெய்யவன்-ஞாயிறு. குடக்கு-
மேற்கு. சித்திரமண்டபம். அழகிய மண்டபம்.                     (4)