இதுவும் அது

32.அஞ்சியே கயல்கெடக் கூடலிற் பொருதுசென்று
     அணிகடைக் குழையிலே விழஅடர்த் தெறிதலால்
வஞ்சிமா னதன்விடும் படையினிற் கொடியகண்
   மடநலீர் இடுமணிக் கடைதிறந் திடுமினோ.

    (பொ-நி) கயல்கெட,  கடலிற்பொருது,  சென்று,  குழையிலே  விழ
அடர்த்து எறிதலால், வஞ்சிமானதன்  படையினிற்  கொடியகண்  மடநலீர் திறந்திடுமின்; (எ-று.)
 
    (வி-ம்.)கயல்-கெண்டைமீன்; மீனக்கொடி. கூடல்-இருகண் கூடுமிடம்; மதுரை பொருது-மோதி; போர்செய்து. குழை-காதணி, காடு. விழ- கண்விழ; பாண்டியர் விழ.

   அடர்த்து எறிதல் - நெருங்கிமோதுதல்;  நெருங்கி அழித்தல். வஞ்சி மானதன்-வஞ்சி சூடிய குலோத்துங்கன். படை - வேற்படை. கண் மடநலீர்:
இரண்டன்   உருபும்   பயனும்  தொக்க  தொகை,  கண்ணின்  பிறழ்ச்சி
கூறப்பட்டது.  மகளிர்  கண்ணிற்கும் குலோத்துங்கன் படைக்கும் சிலேடை
வகையால் ஒப்புமை கூறியதாம்.                                (12)