ஆடல்பாடல் மகளிர் சூழ்ந்திருந்தமை

321.நாட காதி நிருத்த மனைத்தினும்
      நால்வ கைப்பெரும் பண்ணினும் எண்ணிய
ஆடல் பாடலரம்பையர் ஒக்குமவ்
     வணுக்கி மாரு மநேக ரிருக்கவே.

     (பொ-நி.) நிருத்தம்  அனைத்தினும், பண்ணிணும், எண்ணிய ஆடல்
பாடல் அணுக்கிமாரும் அநேகர் இருக்க; (எ-று.)

     (வி-ம்.) நாடகம்  -  நாட்டியம்;  (புறநடம்),  நிருத்தம் - தாண்டவம்.
நால்வகைப் பண் - பாலை,  குறிஞ்சி,  மருதம்,  முல்லை என்னும் பண்கள்.  அணுக்கிமார்-அணுகியிருப்போர்.                               (10)