சிற்றரசர்கள் குடைபிடித்துச் சாமரை வீசியது | 325. | வெங்க ளிற்றிலி ழிந்தபின் வந்தடி | | | வீழ்ந்த மன்னவர் வெந்நிடு முன்இடு தங்கள் பொற்குடை சாமரம் என்றிவை தாங்கள் தங்கரத் தால்பணி மாறவே. |
(பொ-நி.) களிற்றினில் இழிந்தபின், அடிவீழ்ந்த மன்னவர் தம் கரத்தால், குடை சாமரம் என்றிவை பணி மாற; (எ-று.) (வி-ம்.) வெந்நிடுதல் - புறமுதுகிடுதல். இடு -போர்க்களத்தில் போட்டு விட்டுப்போன. பணிமாற-பணிவிடை செய்ய. (14) |