மன்னர்கள் புறத்தே இருக்க, அகத்தே அமைச்சரோடு இருந்தமை 327. | மண்ட லீகரும் மாநில வேந்தரும் | | வந்து ணங்கு கடைத்தலை வண்டைமன் தொண்டை மான்முதல் மந்திரப் பாரகர் சூழ்ந்து தன்கழல் சூடி இருக்கவே. | (பொ-நி.) மண்டலீகரும் வேந்தரும் கடைத்தலை (இருக்க), மந்திரப் பாரகர் தன்கழல் சூடி இருக்க; (எ-று.) (வி-ம்.) மண்டலீகர் - நாட்டின் பிரிவாகிய மண்டலத்தலைவர்கள். மாநிலம்-மிக்க நாடு. வேந்தர்-பேரசர். உணங்குதல்-வருந்துதல். கடைத்தலை- வாயில். ஆணைபெற்றன்றி உள்ளே புகமுடியாதாதலால் உணங்குகடைத் தலையாயிற்று. "கடைத்தலை இருக்க" என "இருக்க" என்பது ஈரிடத்தும் இயைந்தது; வண்டை-ஒரு நகரம். வண்டையன் ஆகிய தொண்டைமான் என்க. தொண்டைமான்-கருணாகரத் தொண்டைமான். மந்திரப்பாரகர் - சூழ்ச்சிவல்ல அமைச்சர். மந்திரம்-சூழ்ந்து என்க. பாரகர்-கரைகண்டவர். கழல்-பாதம். (16) |