மன்னர்கள் ஆணைபெற்று உள்புகுந்தமை 328. | முறையி டத்திரு மந்திர வோலையாள் | | முன்வ ணங்கி முழுவதும் வேந்தர்தம் திறையி டப்புற நின்றனர் என்றலும் செய்கை நோக்கிவந் தெய்தி யிருக்கவே. | (பொ-நி.) முறையிட, மந்திர ஓலையாள் வணங்கி, வேந்தர் புறம் நின்றனர் என்றலும், செய்கை நோக்கி வந்து எய்தி இருக்க; (எ-று.) (வி-ம்.) முறையிட - அரசர்கள் முறையிட. திருமந்திர ஓலை ஆள் அரசன் கட்டளைகளை எழுதி நிறைவேற்றுவோன். முன் -குலோத்துங்கன் முன். திறைஇட-கப்பம் செலுத்த. திறைமுழுவதும் என இயைக்க. செய்கை- உடன்பட்ட செய்கை. எய்தி-குலோத்துங்கனை எய்தி. (17) |