புணர்ச்சி நிலை கூறி விளித்தது 33. | அவசமுற் றுளம்நெகத் துயில்நெகப் பவளவாய் | | அணிசிவப் பறவிழிக் கடைசிவப் புறநிறைக் கவசமற்று இளநகைக் களிவரக் களிவரும் கணவரைப் புணருவீர் கடைதிறந் திடுமினோ. |
(பொ-நி) உளம்நெக, துயில்நெக, வாய்சிவப்புற, விழிக்கடை சிவப்புற, களிநகை வர புணருவீர் திறந்திடுமின்; (எ-று.) (வி-ம்.) அவசம் - பரவசம். நெக - இளக. துயில் - தூக்கம். நெக- தொலைய. அற-நீங்க. சிவப்புற-செம்மை நிறம் கொள்ள. நிறைக்கவசம்- நிறையாகிய மனக்கட்டு. அற்று-அழிந்து. களி-களிப்பால். இளநகை- புன்முறுவல். களிவரும் - களிப்படையும். புணர்ச்சியில் ஊடல் வேறுபாடு கூறியவாறு. காமவேட்கை கொண்ட மகளிர் அச்சம் நாணம் முதலிய மகடூஉக் குணங்களை யிழத்த லியல்பாதலால் 'நிறைக் கவசமற்று' என்றார்.(13) |