வந்த அரசர் செய்கை

333.எந்நக ரங்களும் நாடு
      மெமக்கருள் செய்தனை எம்மையிடச்
சொன்னத னங்கள் கொணர்ந்தனம்
     என்றடி சூடுக ரங்களொடே.

     (பொ-நி.) “நகரங்களும்   நாடும்   அருள்   செய்தனை;   தனங்கள் கொணர்ந்தனம்” என்று அடிசூடு கரங்களொடு; (எ-று.)

     (வி-ம்.) அருள் செய்தனை-யாங்கள் ஆளுமாறு விட்டருளினை, தனம்-பொருள். அடிசூடு-திருவடிகளில் வணங்குகின்ற. கரம்-கை.         (22)