இதுவும் அது

335.இவையும் இவையும்ம ணித்திரள்
      இனைய இவைகன கக்குவை
இருளும் வெயிலும்எ றித்திட
     இலகு மணிமக ரக்குழை
உவையும் உவையும்இ லக்கணம்
     உடைய பிடிஇவை உட்பக
டுயர்செய் கொடிஇவை மற்றிவை
     உரிமை அரிவையர் பட்டமே.

     (பொ-நி.)   இவையும்   இவையும்  மணித்திரள்; இவைகனகக்குவை.
மகரக்குழை:  உவையும் உவையும் பிடி,  இவை பகடு; இவை கொடி;  இவை
|பட்டம்; (எ-று.)

     (வி-ம்.) மணி - இரத்தினம். இனைய - இத்தன்மையனவாகிய. கனகம்-
பொன். மகரக்குழை - சுறாமீன்  வடிவான  காதணி.  நீலமணியும் வைரமும் பதித்தமையின் இருளும் வெயிலும் எறித்தன வென்க. பிடி - பெண்  யானை. 
 பகடு -ஆண் யானை.  மனங்  கவரும்  இயல்பு  வாய்ந்தமை குறிக்க 
உள் பகடு என்றார்.அரிவையர்-பெண்கள். பட்டம், நெற்றிப்பட்டம்.       (24)