இதுவும் அது 336. | ஏறி யருள வடுக்குமிந் நூறு களிறு மிவற்றெதிர் | | ஏனை யரச ரொருத்தரோ ரானை யிடுவ ரெனிற்புவ மாறி அருள அவர்க்கிடை யாமும் இசைவம் எனப்பல மான அரசர் தனித்தனி வாழ்வு கருதி உரைப்பரே. |
(பொ-நி.) நூறு களிறும் ஏறி அருள அடுக்கும். இவற்று எதிர் ஓர் ஆனை இடுவர் எனில் அவர்க்கு இடை இசைவம் என உரைப்பார்; (எ-று.) (வி-ம்.) அடுக்கும் -தகுதியாகும். எதிர்-எதிராக (ஒப்பாக). மாறி-விற்று. அருள் (யானை) கொடுத்த. அவ்வவர்க்கு எனற்பாலது அவர்க்கு என நின்றது. இடை - சமமாக. இசைவம் - கொடுக்க இயைவோம். மானம் -பெருமையினையுடைய. வாழ்வு-தங்கள் நல்வாழ்வு. (25) |