திறைபெற்ற குலோத்துங்கன் வினாயது 337. | அரசர் அஞ்சலென அடியி ரண்டுமவர் | | முடியின் வைத்தருளி அரசர்மற் றுரைசெ யுந்திறைகள் ஒழிய நின்றவரும் உளர்கொ லென்றருளு பொழுதிலே. |
(பொ-நி.) 'அஞ்சல்' என, அடிமுடியின் வைத்தருளி "அரசர் திறைகள் ஒழிய நின்றவரும் உளர்கொல்" என்று அருளு பொழுதினில்; (எ-று.) (வி-ம்.) அரசர் அஞ்சல் - அரசர்களே அஞ்சாதீர் அல்- எதிர்மறை வியங்கோள். அவர்முடி - அவ்வரசர்கள் தலையின் மேல். உரைசெயும் - சொல்லப்படுகின்ற. திறைகள் ஒழிய நின்றவர் - திறைசெலுத்தாதவர். அருளுதல் - கேட்டருளுதல். (26) |