குலோத்துங்கன் இட்ட கட்டளை

340.எளியன் என்றிடினும் குன்றரணம்
      இடிய நம்படைஞர் கடிதுசென்
றனிய லம்புமத மலைகள் கொண்டணைமின்
     அவனை யுங்கொணர்மின் எனலுமே.

     (பொ-நி.)   "எளியன்  என்றிடினும்,  குன்றரணம்  வலிய;்  படைஞர்
சென்று  மதமலைகள்  கொண்டு  அணைமின்;  அவனையும்  கொணர்மின்
எனலும்; (எ-று.)

     (வி-ம்.)  எளியன்  -  வலியற்றவன். குன்றரணம்-மலையரண். இடிய-
அவை அழிய. அளி - வண்டு. அலம்புதல்  - ஒலித்தல். மதமாலை-யானை. அணைமின்-செல்லுங்கள்.                                     (29)