கருணாகரத் தொண்டைமான் போர்க்கழுந்தமை

341.இறைமொ ழிந்தளவில் எழுக லிங்கமவை
      எறிவ னென்றுகழல் தொழுதனன்
மறைமொ ழிந்தபடி மரபின் வந்தகுல
     திலகன் வண்டைநகர் அரசனே.

     (பொ-நி.)   மொழிந்தளவில்  வண்டைநகர்  அரசன்,  கலிங்கமவை
எறிவன்' என்று கழல் தொழுதனன்; (எ-று.)

     (வி-ம்.) இறை: குலோத்துங்கன்.  எழுகலிங்கம் -ஏழுவகை  கலிங்கம்.
எறிவன்-அழிப்பேன், மறை-வேதம்.  குலதிலகன் - தன்மரபிற்குச் சிறந்தவன்.
வண்டைநகர் அரசன்-கருணாகரத் தொண்டைமான்.               (30)