படையின் முழக்கொலி

344.வளைக லிப்பவும் முரசொ லிப்பவும்
      மரமி ரட்டவும் வயிரமாத்
தொளையி சைப்பவும் திசையி பச்செவித்
     தொளைய டைத்தலைத் தொடரவே.

     (பொ-நி.) கலிப்பவும்,  ஒலிப்பவும்,  இரட்டவும்,  இசைப்பவும்,  திசை
இபச்செவி தொளை அடைத்தலைத் தொடர; (எ-று.)

     (வி-ம்.)  வளை-சங்கு. மரம்-இயமரம்; போர்ப்பறை வயிர்-ஊதுகொம்பு.
வயிர ஆறனுருபேற்ற தென்க. இபம்-யானை. செவித்  தொளை அடைத்தல்-
காதுத் தொளையிற்சென்று ஒலிவிம்மிப் பரத்தல். முழக்கொலி அடைத்தலைச்
செய்யத் தொடர்ந்து சென்றன வென்க.                          (33)